பிக்பாஸ் வீட்டில் ஏன் வைல்டுகார்டு இல்லை என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது. நிகழ்ச்சி துவக்கத்திலிருந்தே சுவாரஸ்யமாக சென்றாலும் இடையில் வரும் வைல்டு கார்டு போட்டியாளர்கள் சுவாரஸ்யத்தைக் கூட்டுவார்கள். ஆனால் இந்த சீசனில் யாரும் வைல்டு கார்டு என்ட்ரியாக வரவில்லை. இதற்கு என்ன காரணமாக இருக்கும் என ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் ஒருவர் மாறி ஒருவர் கேள்வி எழுப்பி வந்தனர்.
5 சீசன்களை முடித்து 6வது சீசனை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறது பிக்பாஸ். இந்த சீசனிலும் 100 நாட்களைக் கடந்துவிட்டனர். இந்த வாரத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் முடிவுக்கு வரவுள்ளது. யார் வெற்றியாளர், யார் ரன்னர் அப், இரண்டாவது ரன்னர் அப் யார் எனும் கேள்வியே ரசிகர்களின் மனதில் நிறைந்து காணப்படுகிறது.
அசீம் அல்லது விக்ரமன் இருவரில் ஒருவர்தான் பிக்பாஸ் டைட்டில் வின் பண்ண வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கணிக்கப்பட்டு வருகிறது. இருவருக்கும் அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
மைனா, ஷிவின், அமுதவாணன் ஆகியோர் அடுத்தடுத்த இடத்தைப் பெறுவார்கள் எனும் கணிப்பை வெளியிட்டு வருகின்றனர் ரசிகர்கள். வரும் ஞாயிற்றுக்கிழமை இதற்கான விடை தெரிந்துவிடும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…