Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நடுவழியில் இளைஞரின் பைக் ரிப்பேர்.. இறங்கி வந்த நடிகர் அஜித்.. அடுத்து நடந்தது தான் ஹைலைட்!!

Sekar September 19, 2022 & 17:29 [IST]
நடுவழியில் இளைஞரின் பைக் ரிப்பேர்.. இறங்கி வந்த நடிகர் அஜித்.. அடுத்து நடந்தது தான் ஹைலைட்!!Representative Image.

இளைஞரின் ஒருவரின் பைக் ரிப்பேராகி நடுரோட்டில் நிற்க, நடிகர் அஜித் எந்தவித பந்தாவும் இல்லாமல், தனது பைக்கை விட்டு இறங்கி சரிசெய்து கொடுத்த சம்பம் வைரலாகி வருகிறது.

தனது ஏகே61 படத்தின் படப்பிடிப்புக்கு மத்தியில் நடிகர் அஜித் லடாக் உள்ளிட்ட இடங்களுக்கு பைக்கில் ட்ரிப் அடித்தார். சில தினங்களுக்கு முன்பு ரசிகர் ஒருவருடன் "நான் என்ன கொலைகாரனா கொள்ளைக்காரனா" என அவர் பேசும் வீடியோ இணையத்தை கலக்கியது. 

இந்நிலையில் நடிகர் அஜித் அந்த பயணத்தின்போது நடுவழியில் பைக்குடன் ரிப்பேராகி நின்ற இளைஞர் ஒருவருக்கு உதவியிருக்கிறார். இது தொடர்பாக அந்த இளைஞர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட, அந்த பதிவு வைரலாகி வருகிறது.

இளைஞர் தனது பதிவில், "நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். எல்லாமே ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் நடக்கும் , முதன்முறையாக என் பைக் பயணத்தில் பைக் டயர் ரிப்பேராகியது. நான் உதவி தேடிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு bmw 1250GSA (எனது கனவு பைக்) கடந்து சென்றது. நான் அவரை நோக்கி கையை அசைத்தேன்.

நான் அவரிடம் ஏர் கம்ப்ரஸரைக் கேட்டேன். அதற்கு அவர் அது தன்னிடம் இருக்கிறது என்று கூறினார். ஆனால் பின்னால் வரும் தனது காரில் இருப்பதாகவும், 10 நிமிடம் ஆகும் என்றும் கூறினார். நான் அவரிடம் பைக்கைப் பற்றி கொஞ்சம் பேசினேன். அவர் எங்களிடம் உங்கள் பெயர் என்ன, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார்.

பின்னர் அவர் ஹாய் நான் அஜித், உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பிறகு அவரே இறங்கி அதை சரி செய்ய உதவினார். இரண்டு மணி நேரம் நாங்கள் ஒன்றாக பயணம் செய்தோம். நான் அவரிடம் மீண்டும் அவரிடம் தயங்கியபடியே உங்களுடன் ஒரு தேநீர் அருந்தலாமா என்று கேட்க, அடுத்த டீக்கடையில் நின்று தேநீர் அருந்தினோம்.

10 நிமிடங்களுக்கு மேல் அவரது முந்தைய ரூட் மேப்பைப் பற்றி உரையாடியவர், எங்களுக்கு வாழ்த்து கூறி கிளம்பினார்.

நான் முழுக்கதையையும் பதிவிட்டதற்குக் காரணம் இரண்டே

1. மிகப் பெரிய மனிதர் ஒருவர் எந்தவித பந்தாவும் இல்லாமல் எளிமையான அணுகுமுறையைக் கொண்துளார். அவருடைய ரசிகர்கள், மக்கள் மீது அற்புதமான அன்பைக் கொண்டிருக்கிறார்.
2. எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது, இந்த நாளை என்னால் மறக்க முடியாது, அவர் எனது பார்வையை முற்றிலும் மாற்றினார்." எனக் கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்