Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இதுக்கு ஒரு முடிவே இல்லையா?... கூடலூரில் அரங்கேறிய பரிதாப சம்பவம்! 

Kanimozhi Updated:
இதுக்கு ஒரு முடிவே இல்லையா?... கூடலூரில் அரங்கேறிய பரிதாப சம்பவம்! Representative Image.

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி 58 வயது மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 

புளியம்பாறை பகுதியை சேர்ந்த கல்யாணி என்ற மூதாட்டி உட்பட 4 பேர் விறகு சேகரிப்பதற்காக அருகேயுள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது ஒற்றை காட்டு யானை விறகு எடுத்துக்கொண்டிருந்தவர்களை தாக்கியுள்ளது. இதில் 3 பேர் உயிர் தப்பிய நிலையில், மூதாட்டி கல்யாணி யானையின் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார். 

அவரது உடலை மீட்ட காவல்துறையினர் கூடலூர்  அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். ஏற்கனவே தேவாலா பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் PM 2 யானையை பிடிக்க 13-வது நாளாக வனத்துறையினர் முயற்சித்து வரும் நிலையில் இன்று  கல்யாணி என்ற மூதாட்டியை வேறொரு காட்டு யானை தாக்கி கொன்ற சம்பவம் கூடலூர் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்