கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி 58 வயது மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
புளியம்பாறை பகுதியை சேர்ந்த கல்யாணி என்ற மூதாட்டி உட்பட 4 பேர் விறகு சேகரிப்பதற்காக அருகேயுள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது ஒற்றை காட்டு யானை விறகு எடுத்துக்கொண்டிருந்தவர்களை தாக்கியுள்ளது. இதில் 3 பேர் உயிர் தப்பிய நிலையில், மூதாட்டி கல்யாணி யானையின் தாக்குதலில் சிக்கி உயிரிழந்தார்.
அவரது உடலை மீட்ட காவல்துறையினர் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். ஏற்கனவே தேவாலா பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் PM 2 யானையை பிடிக்க 13-வது நாளாக வனத்துறையினர் முயற்சித்து வரும் நிலையில் இன்று கல்யாணி என்ற மூதாட்டியை வேறொரு காட்டு யானை தாக்கி கொன்ற சம்பவம் கூடலூர் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…