முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 152 அடியை நெருங்குவதால், கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் வல்லகடவு, வண்டிப்பெரியார், சப்பாத்து உள்ளிட்ட பகுதிகளுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
152 கொள்ளளவு கொண்ட முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும் வழிகாட்டுதல்படியும் தற்போது 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டு வருகின்றது. 142 அடிக்கு மேல் அணைக்கு வரும் தண்ணீர் கேரள மாநிலம் இடுக்கி அணைக்கு உபரி நீராக திறந்து விடப்படுகின்றது.
தற்போது முல்லைப் பெரியாறு அணையில் மழை பெய்வது காரணமாக அணையின் நீர்மட்டம் நேற்று 141.80 அடியாக இருந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி கிடுகிடுவென உயர்ந்த நீர்மட்டம் 141.95 அடியாக உயர்ந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான தேக்கடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அணைக்கு நீர்வரத்து 296 கனடியில் இருந்து 761 கனஅடியாக உயர்ந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு 761 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையில் 7652.50 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் இன்னும் சில மணி நேரத்தில் 142 அடியாக உயருவதற்கு வாய்ப்புள்ளதால், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையினை கேரளா, தமிழக அரசுகளுக்கும் மற்றும் தேனி, இடுக்கி மாவட்ட ஆட்சியர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இடுக்கி மாவட்ட ஆட்சியர் இடுக்கி மாவட்டத்தில் முல்லை பெரியாறு உபரிநீர் வாழிந்தோடும் வல்லகடவு, வண்டிப்பெரியார், சப்பாத்து ஆகிய பகுதிகளில் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்க உள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…