தமிழகம், தமிழ்நாடு என்பது இரண்டும் ஒன்றுதான் அரசியல் வாதிகளின் சூழ்ச்சியில் தமிழர்கள் விழுந்துவிடக்கூடாது என இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் துரை ஆனந்த் தயாரிப்பில், இயக்குனர் தமிழ்செல்வன் இயக்கத்தில் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ள விழித்தெழு திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசைவெளீட்டு விழா நடைப்பெற்றது. இத்திரைப்படத்தில் நடிகர் அசோக்,நடிகை காயத்ரி ரேமா , தயாரிப்பாளர் துரை ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவ்விழாவில் பேசிய இயக்குனர் பேரரசு, திரைப்படத்தின் இசை டிரைலர் அருமையாக உள்ளது. இந்த திரைக்குழுவில் பணியாற்றியவர்களில் தமிழ் பெயர்கள் அதிகமாக உள்ளது. . தமிழர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
தமிழகம், தமிழ்நாடு என்பது இரண்டும் ஒன்றுதான் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியில் தமிழர்கள் விழுந்துவிடக்கூடாது. அரசியலுக்காக தமிழகம்,தமிழ்நாடு என பிரிக்க கூடாது. தமிழன்,தமிழனாக இருக்க வேண்டும். . ஆளுநர் சில வருடம் இருப்பார் சென்று விடுவார் சொன்னால் சொல்லிவிட்டு போகட்டும். தமிழர்கள்
நாம் தான் இங்கு இருக்க போகிறோம்.
ஆன்லைன் மூலமாக பணம் மட்டும் அல்லாமல் பெண்களின் மானமும் போகிறது. ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் நீதிமன்றம் மக்களை பார்க்காது சட்டத்தை தான் பார்க்கும் ஆன்லைன் ரம்மியை தமிழக அரசு தடையிட வேண்டும் ஏன் அரசு ஆளுநரை நாட வேண்டும் என சீமானையே மிஞ்சும் அளவிற்கு தமிழர்கள் என்ற ஒன்றை வார்த்தையை வைத்து பேரரசு நன்றாக சமாளித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…