நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு தற்போது சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 3 நாளில் இதய அறுவை சிகிச்சை அளிக்கப்படும் என்று சுகாதாரம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நீதிமன்ற அனுமதியின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது சிகிச்சையில் இருந்துவரும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை சேர்த்து சிகிச்சையளிக்க வேண்டும் என்பது அவரது துணைவியாரின் முடிவு. தனி நபரின் விருப்பங்களில் தலையிடுவது முறையாகாது என்பதால் காவேரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பிவிட்டோம். எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளிக்க நீதிமன்றத்தில் ஒப்பு கொண்டு உள்ளார். ஆனால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள்தான் வர வேண்டும். மதுரை எய்ம்ஸ் அல்ல. பிளட் தின்னர் (Blood thinner) போடுவதை 3 முதல் 4 நாட்களுக்கு நிறுத்தினால்தான் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும். அதன்படி, அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நேற்றே பிளட் தின்னர் போடுவது நிறுத்தப்பட்டுவிட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…