தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு, புதுசேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 18-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சென்னையை பொருத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் மிதமான மலை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், இன்று ஆந்திரா, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு என்றும் குமரிக்கடல், மன்னர் வளைகுடா, தென்தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசம் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…