சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று இரண்டாவது நாளாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று 3 மணியளவில் தொடங்கிய 2வது சுற்றுக்கான தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 6 அணிகள் களமிறங்கி விறு விறுப்பாக விளையாடினர்.
இந்நிலையில், நேற்று ஓய்வில் இருந்த தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா இன்று களம் இறங்கினார். இந்த போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் விளையாடி வரும் நிலையில், மெக்சிகோ வீரரை வீழ்த்தி தமிழ்நாட்டை சேர்ந்த கார்த்திகேயன் முரளி வெற்றி பெற்றார்.
மேலும்இந்தியா 3-வது அணியில் தமிழக வீராங்கனை நந்திதா , சிங்கப்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…