தமிழ் மாதத்தில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. அந்தவகையில், கார்த்திகை மாதத்திற்கு சிறப்பைக்கொடுக்க கூடியதே கார்த்திகை தீபம் தான். தீபாவளி, பொங்கல் பண்டிகை போன்று தமிழ் மக்களால் காலம் காலமாக கொண்டாடப்படும் ஒரு பழமையான பண்டிகை என்றால் இது தான். இந்த நாளில் மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் எங்கும் அகல் விளக்குகளை ஏற்றி சிவனை வழிபடுவது வழக்கம். வீடுகள் மட்டுமல்லாமல், கோவில்களும் இந்நாளில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும்.
மேலும், இந்த தீபத்திருநாளில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது திருவண்ணாமலை தீபம் தான். பஞ்சப்பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான இந்த திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் மகா தீபம் ஏற்றப்படும். அங்கு தீபம் ஏற்றிய பிறகு தான் வீடுகளில் பெண்கள் விளக்கு ஏற்றுவார்கள். இத்தகைய சிறப்பான நாளில், வாசலிலும் கோலங்களிட்டு, கோலத்தின் மீது விளக்கு வைத்து, வீட்டை மட்டுமல்லாமல், வீட்டு வாசலையும் பிரகாசிக்கச் செய்வோம். இந்த இனிமையான நாளில் அன்பையும் வாழ்த்தையும் நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினருடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
“தீமையின் அருள் நீங்கி உங்க வாழ்வில் நன்மையின் ஒளி வீசட்டும்… இனிய கார்த்திகை தீபம்..!!”
“தீபத்திருநாளை கொண்டாடும் உறவுகள் அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள்..!”
“இல்லம் எனும் விளக்கினில்!
அன்பு எனும் எண்ணெய் ஊற்றி!
உறவு எனும் திரி இட்டு!
மகிழ்ச்சி எனும் ஒளி உங்கள் இல்லம் எங்கும் பிரகாசிக்கட்டும்!
இனிய கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்..”
“நட்சத்திர ஒளியில் வானம் நிறைந்திருப்பது போல் தீப ஒளியில் இல்லம் நிறையட்டும்.. கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்!”
“வீதியெல்லாம் வண்ண ஒளியின் பூக்கோலம்..
வாசலெல்லாம் மகிழ்ச்சி குதுகலத்தின் ஆரவாரம்..
மனமெல்லாம் சந்தோஷம் பொங்கி இருக்க இனிய கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்..!”
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…