சோழிங்கநல்லூர் ஆவின் பால்பண்ணையில் தலைமைச் செயலாளர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு பல அறிவுறுத்தல்களை வழங்கினார்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் சென்னையில் அம்பத்தூர், மாதவரம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் பால் மற்றும் பால் உபபொருட்கள் பால் பண்ணைகளை இயக்கி வருகிறது. இதில் சோழிங்நல்லூர் பால் பண்ணையில் இன்று தலைமைச் செயலாளர் இறையன்பு திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் பால் பண்ணையின் உற்பத்தி, குளிரூட்டும் பிரிவு, தரக்கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் பொறியியல் பிரிவுகளின் பணிகளை ஆய்வு செய்தார்.
மேலும் பால் ஏற்றிவரப்பட்ட டேங்கர் லாரிகளில் பாலின் தரம் பரிசோதனை செய்யப்படுவது குறித்தும் தலைமைச் செயலாளர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் தலைமை செயலாளர் வழங்கிய அறிவுறுத்தல்களின் முழு விவரம்:
சூரிய மின் உற்பத்தியை பயன்படுத்துவதை அதிகப்படுத்தி மின்சார செலவினங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இயந்திரங்களை பயன்படுத்து உற்பத்தி செலவினங்களை குறைப்பதற்கான வழிமுறைகளை கையாள வேண்டும் என கூறியுள்ளார். பாலகங்களில் குழந்தைகள் விரும்பும் பால் பொருட்களை முன் பகுதியில் காட்சிப்படுத்தி விற்பனையை அதிகப்படுத்த வேண்டும்.
விலைபட்டியலை வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வண்ணம் காட்சிப்படுத்த வேண்டும். ஒவ்வொரு வாரமும் கூட்டங்களை கூடி வளர்ச்சிக்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும் போன்ற அறிவுறுத்தல்களை வழங்கினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…