சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ மதுபானத்திற்கு பதிலாக கஞ்சா அடிக்கலாம் என கூறியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மஸ்தூரி தொகுதி எம்.எல்.ஏ கிருஷ்ணமூர்த்தி “காங்கிரஸ் ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் அதிகரிப்பதற்கு மது அருந்துவதே காரணம். மேலும், மது குற்றம் செய்ய மனிதர்களை தூண்டுகிறது.
இந்நிலையில், கஞ்சா புகைப்பவர்களுக்கு குற்றம் செய்யும் எண்ணம் ஏற்படுவதில்லை. இதனால் மதுவை முற்றிலுமாக ஒழித்து கஞ்சா புழக்கத்திற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும். மேலும், இதுகுறித்து நான் சட்டமன்றத்திலும் பேசினேன்” என தெரிவித்துள்ளார்.
அவரது இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் “இந்தியாவில் கஞ்சாவை சட்டபூர்வமாக்க வேண்டும் என்று விரும்பினால் அவர் மத்திய பாஜக அரசுக்கு தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுக்கட்டும்” என்று கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…