சென்னையில் மழை பெய்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் பருவ மழை பெய்ய உள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
இந்நிலையில், இந்த ஆலோசனையில் சென்னையில் மழை பெய்தால் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க 15 மண்டலங்களுக்கும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது
மேலும், இந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கண்காணிக்கவும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…