சென்னையில் ஹெல்மெட் விதிமீறல் தொடர்பாக 44 நாட்களில் ரூ.1.36 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவரும் அவருக்கு பின்னல் அமர்ந்திருக்கும் நபர்களும் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் பொது மக்கள் அதனை பெரிதாக கவனத்தில் எடுத்துக்கொள்ளாதது வருத்தத்திற்குரிய செயலாகவே பார்க்கபடுகிறது.
இந்நிலையில் விதிமீறல் தொடர்பாக கடந்த மே 23ஆம் தேதி முதல் நேற்று வரை 1 லட்சத்து 36 ஆயிரத்து 656 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாகன ஓட்டிகளிடம் 72 லட்சத்து 74 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், பின்னால் அமர்ந்து சென்றோரிடம் 63 லட்சத்து 91 ஆயிரத்து 200 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…