தமிழகத்தில் மாலை நேர உழவர் சந்தைகள் திறக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் மாதத்திற்கு ஒரு முறை வீதம் 37 இடங்களில் தினமும் மாலை 4 மணி முதல் 8 மணி வரை மாலை நேர உழவர் சந்தை செயல்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னையில் மட்டும் இந்த உழவர் சந்தை செயல்படாது என தெரிவித்துள்ளனர். மேலும், இந்த உழவர் சந்தையில் உழவர்களின் சிறுதானியங்கள் பயறு வகைகள் ஆகியவை விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஆகஸ்ட் 12ஆம் தேதி செயல்பட உள்ள உழவர் சந்தையை முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் திருச்சி, தஞ்சாவூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் முதல்கட்டமாக மாலை நேர உழவர் சந்தைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…