ரேஷன் கடைகளில் காதி பொருட்கள், பனை வெல்லம் போன்றவற்றை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஊக்க தொகையை பெற சில நிபந்தனைகளை வித்து=இத்துள்ளது.
அந்த நிபந்தனைகள் குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஒரு மாதத்தில் சென்னையில் உள்ள நியாய விலை கடைகளில் 50 ஆயிரத்திற்கும் மேல் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டிருக்க வேண்டும், கிராமப்புறத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய வேண்டும். நகர்ப்புற நியாயவிலை கடைகளில் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை பூர்த்தி செய்யும் விற்பனையாளர்களுக்கு அம்மாதம் செலுத்தப்படும் விற்பனை தொகையில் மாதம் 1000 ரூபாய்க்கு மிகாமல் ஊக்கத்தொகையானது வழங்கப்படவேண்டும் என நியாய விலை கடை நடத்தும் கூட்டுறவு நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…