உலகில் நடந்த ஆச்சர்யத்தில் ஒன்று, ஒரு வயது குழந்தைக்கு குடல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
ஸ்பெயினில் Emma என்ற குழந்தை பிறக்கும் சிறுகுடல் நார்மலாக இல்லை. வழக்கத்தை விட அந்த குழந்தைக்கு சிறுகுடல் சிறிதாக இருப்பதாக கூறுகின்றனர். அதனால் பிறந்த ஒரு மாதத்திலையே குடல் செயலிழந்துவிட்டது. அதனை தொடர்ந்து அந்த குழந்தைக்கு மற்ற உறுப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்க ஆரம்பித்துவிட்டது. எனவே, மாற்று அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்ற நிலைக்கு எம்மா தள்ளப்பட்டால்.
கடவுளின் கிருபையால், இறந்த ஒருவரின் உடல் உறுப்புக்கள் அவருக்கு தானமாக கிடைத்தது. எனவே, உலகில் முதல் முறையாக பிறந்த குழந்தைக்கு குடல் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு உயிர்தப்பிய பெருமை எம்மா என்ற ஒரு வயது குழந்தைக்கு சேரும். குடல் மட்டும் அல்லாது வயிறு, கல்லீரல், மண்ணீரல் மற்றும் கணையம் போன்ற உறுப்புகளும் குழந்தைக்கு மாற்றப்பட்டன. தற்போது 17 மாதங்கள் ஆன நிலையில் எம்மாவின் உடல்நிலை தேறி வருவதாகவும், நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…