அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாள்களாகவே, சீனாவில் தீ விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்னரே மத்திய சீனா பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் வெல்டிங் செய்த இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 38 பேர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தற்போது சீனாவில் ஜின்ஜியாங் மாகாணம் உரும்கியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், தீ மளமளவென பரவியதுடன், அந்தப் பகுதி முழுவதுமே கரும் புகையுடன் சூழ்ந்து காணப்பட்டது. தீ காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், கட்டிடத்தில் இருந்த மக்கள் வெளியே வர முடியாமல் தவித்துள்ளனர்.
இதனை அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், இந்த தீ விபத்து காரணமாக 10 பேர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர். 9 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தீ பரவுவதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…