தமிழகத்தில் சுமார் 10 பொறியியல் பல்கலைக்கழகங்கள் மூடப்பட இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகள் செயல்பட வேண்டும் என்றால் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்தின் அங்கீகாரம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் அனுமதி பெற்று செயல்பட வேண்டும். மேலும் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கு முன்னர் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம், மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதியை பெற வேண்டும்.
இந்நிலையில் தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் அங்கீகாரம் பெறுவதற்கு 10 பொறியியல் கல்லூரிகள் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பிக்கவில்லை என தெரிவித்துள்ளது. இதனால் வரும் கல்வி ஆண்டு முதல் அந்த 10 தனியார் பொறியியல் கல்லூரிகளும் மூடப்படுகின்றன. அந்த 10 பொறியியல் கல்லூரிகளின் பெயர்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…