உலக புகையிலை எதிர்ப்பு நாள் மே 31ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டு அறிவித்தது. மனித இறப்புகளின் முக்கிய காரணிகளில் புகையிலை 2வது இடத்தை வகிக்கிறது. இச்சிறப்பு நாளின் மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறது.
இந்நிலையில், ஹரி இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடிப்பில் 'யானை' திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அருண் விஜய், ''சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் நடிகர்களின் பங்கு முக்கியமாகும். அந்த வகையில் இனிமேல் என்னுடைய படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளைத் தவிர்ப்பேன்'' என்று கூறியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…