பல நாடுகளில் தற்போது வேகமாக பரவி வரும் குரங்கம்மை குறித்து மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை எதிர்ப்பு சக்தி, ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவது கடந்த 13 ஆம் தேதி முதல் 92 பேர் இந்த குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நோய் அறிகுறி தொடர்பில் சாதாரண பி.சீ.ஆர் பரிசோதனை மூலம் கண்டறிய முடியும். தற்போது உலக நாடுகளில் குறைந்த வீரியம் கொண்ட நோயாளர்களே அடையாளம் காணப்படுகின்றனர்.
இந்த நோயின் அறிகுறியாக காய்ச்சல், தலைவலி, உடல்வலி, களைப்பு போன்றவை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவை போன்று வேகமாக பரவும் தன்மை இதற்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…