ஜே.ஈ.ஈ மெயின் தேர்வில் 300க்கு முதல் 300 மதிப்பெண் பெற்ற மாணவர் மீண்டும் தனது மதிப்பெண்ணை உறுதி செய்து கொள்ள இரண்டாவது முறையாக தேர்வு எழுத உள்ளதாக கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நவ்யா ஹிசாரியா என்ற மாணவர் ஜே.ஈ.ஈ தேர்வில் 300க்கு 300 மதிப்பெண் பெற்று முதல் நபராக தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்நிலையில், அவர் மீண்டும் ஒருமுறை ஜே.ஈ.ஈ தேர்வு எழுத உள்ளதாக கூகூறியுள்ளார். அதன்படி, “இரண்டாவது முறை முயற்சிப்பதன் மூலம் எனது மதிப்பெண்ணை நான் உறுதி செய்து கொள்ள முடியும் என்றும் இரண்டாவது முறை குறைவான மதிப்பெண் பெற்றாலும் அட்வான்ஸ் தேர்வுக்கான பயிற்சியாக எடுத்து கொள்வேன்” என கூறியுள்ளார்.
மேலும், இரண்டாவது முறை எழுதும் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றாலும் 2 தேர்வில் எது அதிகமோ அந்த மதிப்பெண் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதால் அவர் 300 மதிப்பெண் பெற்றதாகவே சான்றிதல் வழங்கப்படும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…