சுடுகாட்டிற்கு பிணத்தை எடுத்துச் செல்வதற்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தபோது, இறந்ததாக அறிவிக்கப்பட்ட மூதாட்டியின் உடலில் திடீர் அசைவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதை யாராலும் நம்ப முடியவில்லை.
ஆனால் வயதான பெண் மெல்ல கண்களைத் திறந்தபோது, குடும்பத்தின் உற்சாகம் கட்டுப்படுத்த முடியாததாக மாறியது. இந்த அசாதாரண சம்பவத்திற்குப் பிறகு, மூதாட்டியின் வீட்டிற்கு, அவரைப் பார்க்க ஏராளமான மக்கள் குவிந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ரூர்க்கிக்கு உட்பட்ட நர்சன் குர்த் பகுதியில் வசிக்கும் வினோத்தின் தாயார் ஞான தேவி (102) சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இந்நிலையில், செவ்வாய்கிழமை காலை அந்த மூதாட்டி திடீரென மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் டாக்டரை அழைத்து முதியவரை பரிசோதித்த பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த செய்தியால் அப்பகுதியில் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். மேலும் தாயின் மரணம் குறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, ஏராளமானோர் வீட்டில் திரண்டு இறுதிச் சடங்கிற்கு தயாராகினர்.
மூதாட்டியின் இறுதிச் சடங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் குடும்பத்தினர் முடித்துவிட்ட நிலையில், அவரது சடலத்தை தூக்கிச் செல்ல பாடை கொண்டுவரப்பட்டபோது திடீரென மூதாட்டியின் உடலில் சலனம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் கண்களைத் திறந்தார். இந்தக் காட்சியைக் கண்டு அனைவரும் வியந்து மகிழ்ச்சி அலை வீசியது.
மூதாட்டி குடும்பத்தில் மட்டுமல்லாது, முழு கிராமத்திலுமே மூத்த பெண் என்பதால், முழு கிராமமும் அவர் உயிர்த்தெழுந்ததை கொண்டாடுகிறது. சுயநினைவு திரும்பிய பிறகு, மூதாட்டி பழையபடி சாதாரண உணவை சாப்பிட்டு வருகிறார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…