Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

10, 12, வகுப்பு வினாத்தாள் திருத்தும் பணி...இன்றுமுதல் தொடக்கம்...!

madhankumar June 01, 2022 & 11:40 [IST]
10, 12, வகுப்பு வினாத்தாள் திருத்தும் பணி...இன்றுமுதல் தொடக்கம்...!Representative Image.

தமிழகத்தில் பொதுக்கல்வி பாடத்திட்டத்தில் படிக்கும் 10,11,12 ஆகிய மாணவர்களுக்கான பொது தேர்வு நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் 10,மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கான வினாத்தாள் திருத்தும் பணி இன்றுமுதல் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் மொத்தமாக 17 லட்சம் மாணவர்கள் எழுதிய 10, 12 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. வரும் 8-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறுகின்றது. 8 லட்சம் பேர் எழுதிய 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 9-ம் தேதி தொடங்குகிறது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 23-ம் தேதி வெளியாகிறது எம தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்து தலைமை ஆசிரியர்களுக்கு விலக்கு அளித்து தேர்வுத்துறைகள் இயக்கம் உத்தரவு அளித்துள்ளது. முதற்கட்டமாக, பிளஸ் 2 விடைத்தாள்கள்; பின், 10ம் வகுப்பு விடைத்தாள்கள்; அதைத் தொடர்ந்து, பிளஸ் 1 விடைத்தாள்களும் திருத்தப்பட உள்ளன. 

மதிப்பெண் சரிபார்ப்பு பணிகளில் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர், அனால் வரும் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், அதற்கான முன் ஏற்பாடுகளை செய்ய தலைமை ஆசிரியர்கள் வேண்டும் என்ற காரணத்தால் அவர்களை அந்த பணியில் இருந்து விடுவித்து, மதிப்பெண் சரிபார்ப்பு பணிக்கு அந்தந்த பாடம் சார்ந்த மூத்த ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்