Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பேருந்து தீப்பிடித்து விபத்து.. தூங்கிக் கொண்டிருந்த 11 பேர் உடல் கருகி பரிதாப பலி..

Nandhinipriya Ganeshan October 08, 2022 & 09:47 [IST]
பேருந்து தீப்பிடித்து விபத்து.. தூங்கிக் கொண்டிருந்த 11 பேர் உடல் கருகி பரிதாப பலி..Representative Image.

மகாராஷ்டிரா:

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இன்று அதிகாலை 5 மணியளவில் அவுரங்காபாத் சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. 

விபத்துக்குள்ளான பேருந்து ஸ்லீப்பர் கோச். அதிலிருந்த பயணிகள் பெரும்பாலானோர் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே தீயில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தற்போது உயிரிழந்தவர்களின் அடையாளம் காணும்பணி நடைபெற்று வருகிறது. முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்