Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தொடரும் 2K கிட்ஸ் தற்கொலைகள்...ரயில் முன் பாய்ந்த 11ஆம் வகுப்பு மாணவன்..!

madhankumar July 27, 2022 & 11:23 [IST]
தொடரும் 2K கிட்ஸ் தற்கொலைகள்...ரயில் முன் பாய்ந்த 11ஆம் வகுப்பு மாணவன்..!Representative Image.

சமீப நாட்களாக பள்ளி மாணவர்கள் அற்ப காரணங்களுக்காக தங்களது உயிரை மாய்த்துக்கொள்ளும் செயலை செய்துவருகின்றார். முடிவெட்ட சொன்னதற்கு தற்கொலை, திட்டியதற்கு தற்கொலை, பைக் வாங்கித்தராததற்கு தற்கொலை செல்போன் கொடுக்கவில்லை என கூறி தற்கொலை என சிறு சிறு விஷயங்களுக்காக தற்கொலை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள மருதம் நகரில் வசித்து வந்தவர் ஜெகதீஷ். வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவரது 2-வது மகன் சதீஷ் (16). இவன் பாளை பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் அதே பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அவரின் உடலை மீது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த விசாரணையில் தொடர்ந்து செல்போன் பயன்படுத்தி வந்ததால் பெற்றோர்கள் கண்டித்த நிலையில் மனமுடைந்த சதீஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுதான் உண்மைக்காரணமா இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்