Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி... 2 ஆயிரம் சிம்கார்டு தயார்...

Muthu Kumar July 26, 2022 & 20:00 [IST]
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி... 2 ஆயிரம் சிம்கார்டு தயார்...Representative Image.

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை மறுநாள் முதல் தொடங்க உள்ளது. அதற்காண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன்படி, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக 5ஜி இன்டர்நெட் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த போட்டியில் கலந்துகொள்ள வரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வீரர்களுக்காக 2000 சிம்கார்டுகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.
 
மேலும், இதுவரை 300 செஸ் வீரர்கள் வெளிநாட்டில் இருந்து சென்னை வந்துள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், இன்று மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் சென்னை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர்கள் தங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்