Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சாம்பாரில் தக்காளியை சேர்த்தது குத்தமா..? - கோபித்துக் கொண்டு கணவனை விட்டுச் சென்ற மனைவி!

Baskaran Updated:
சாம்பாரில் தக்காளியை சேர்த்தது குத்தமா..? - கோபித்துக் கொண்டு கணவனை விட்டுச் சென்ற மனைவி!Representative Image.

போபால்: சமையலில் தக்காளியை, தன்னிடம் கேட்காமல் கணவன் சேர்த்ததால் கோபம் அடைந்த மனைவி வீட்டை விட்டு வெளியேறிய விசித்திர நிகழ்வு ம.பி., மாநிலத்தில் நடந்துள்ளது.

சமீப நாட்களாக நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கிலோ ரூ.140 ஐ தாண்டி உள்ளது. ஏழை மக்கள், தங்களது வருமானத்தில் பாதியை தக்காளிக்கே செலவு செய்ய வேண்டிய உள்ளதால், அவர்கள் தக்காளியை குறைத்து வருகின்றனர். ஓட்டல்கள், உணவகங்கள், உணவு தயாரிப்பாளர்களை பதம் பார்த்துள்ளது.

இந்நிலையில், ம.பி.,யில் சமையலில் தக்காளியை சேர்த்ததற்காக மனைவி கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஷதோல் மாவட்டத்தில் வசிப்பவர் சந்தீப் பர்மன். இவரது மனைவி ஆர்த்தி பர்மன். இவர்களுக்கு குழந்தை உள்ளது. சமீபத்தில் சமையல் செய்த சந்தீப் பர்மன், 2 தக்காளியை பயன்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் மனைவியிடம் கேட்கவில்லை என தெரிகிறது. இதனால், கோபமடைந்த ஆர்த்தி சண்டை போட்டுள்ளார்.

பிறகு குழந்தையை அழைத்து கொண்டு வீட்டை வெளியேறினார். இதனால், விரக்தியடைந்த சந்தீப் போலீசில் புகார் அளித்தார். புகார் கொடுத்தும், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து போலீசார் கூறுகையில், ஆர்த்தி கணவனுடன் சண்டையிட்டு, அவரது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். இருவரையும் மொபைல் போனில் பேச வைத்து சமரசம் செய்துள்ளோம். அவர் விரைவில் வீட்டிற்கு திரும்புவார் என்றனர்.

சாம்பாரில் தக்காளியை சேர்த்தது குத்தமா..? - கோபித்துக் கொண்டு கணவனை விட்டுச் சென்ற மனைவி!Representative Image

இந்நிலையில், ம.பி.,யில் சமையலில் தக்காளியை சேர்த்ததற்காக மனைவி கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஷதோல் மாவட்டத்தில் வசிப்பவர் சந்தீப் பர்மன். இவரது மனைவி ஆர்த்தி பர்மன். இவர்களுக்கு குழந்தை உள்ளது. சமீபத்தில் சமையல் செய்த சந்தீப் பர்மன், 2 தக்காளியை பயன்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் மனைவியிடம் கேட்கவில்லை என தெரிகிறது. இதனால், கோபமடைந்த ஆர்த்தி சண்டை போட்டுள்ளார்.

பிறகு குழந்தையை அழைத்து கொண்டு வீட்டை வெளியேறினார். இதனால், விரக்தியடைந்த சந்தீப் போலீசில் புகார் அளித்தார். புகார் கொடுத்தும், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டி உள்ளார். இது குறித்து போலீசார் கூறுகையில், ஆர்த்தி கணவனுடன் சண்டையிட்டு, அவரது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். இருவரையும் மொபைல் போனில் பேச வைத்து சமரசம் செய்துள்ளோம். அவர் விரைவில் வீட்டிற்கு திரும்புவார் என்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்