கீரனூரி கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தி என்பரின் மகன் கோகுல். இவர் தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று இரவு சுமார் 7 மணிக்கு கோகுலின் உடன் படிக்கும் மாணவன் ஒருவன் வீட்டிற்கு வந்து பிறந்த நாள் பார்ட்டி எனக்கூறி கோகுலை கூட்டிச் சென்றதாக சொல்லப்படுகிறது.
இரவு முழுவதும் கோகுல் வீட்டிற்கு திரும்பி வரவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பதறிப்போன பெற்றோர் அதிகாலையில் கோகுலை தேடி உள்ளனர். அப்போது, திருக்கோவிலூர் அருகே கை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டுக்காயங்களுடன் மாணவன் கோகுல் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் அறிந்த விரைந்து வந்த கள்ளக்குறிச்சி போலீசார் கோகுலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை தொடர்பாக கோகுலை வீட்டில் இருந்து அழைத்து சென்ற மாணவனை பிடித்த போலீசார் கொலைக்கு உண்டான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், பிறந்தநாளில் மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய மாணவன் கோகுலை வெட்டிக் கொலை செய்துள்ள கோர சம்பவம் கள்ளக்குறிச்சி பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…