Latest News Tamilnadu: கடந்த சில நாள்களாக, வங்கக்கடலில் ஏற்பட்ட புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து கொண்டு வருகிறது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு இருந்து, வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக அசானி புயல் உருவாகி தமிழகம் எங்கும் பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது.
இந்தப் புயல் ஆந்திரா, ஒரிசா போன்ற கரையைக் கடந்து மீனவர்களுக்குத் தொடர்ந்து எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. மேலும், இதன் படி, மீனவர்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், மே 17 ஆம் தேதி மன்னார் வளைகுடா, கன்னியாக்குமரி கடல் பகுதியில் மிக அதிகமான காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், மே மாதம் 17 ஆம் நாள் சுமார் 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும், இதனால், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் அறிவிப்புகள் வெளியாகின. மேலும், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்குக் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்....
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…