Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

யாருகிட்ட...என்னையவா கடிக்கிற...பாம்பை கடித்து கொன்று...12 வயது சிறுவன்!

Priyanka Hochumin November 03, 2022 & 14:45 [IST]
யாருகிட்ட...என்னையவா கடிக்கிற...பாம்பை கடித்து கொன்று...12 வயது சிறுவன்!Representative Image.

யார கடிக்கிற நாங்கலாம் வேற மாறி என்று தன்னை கடித்த பாம்பை இழுத்து பிடித்து திரும்ப கடித்து கொன்ற சிறுவன்.

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மலைவாழ் பகுதியில், பாஹ்டி கோர்வா (Phahdi Korwa) என்ற பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு வசித்து வரும் தீபக் ராம் என்னும் 12 வயது சிறுவன் தன்னுடைய அக்கா வீட்டிற்கு சென்றிருக்கிறான். அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் போது அந்த சிறுவனை பாம்பு ஒன்று கடித்து விட்டது. அதனால் கடுப்பான தீபக், அந்த பாம்பை வளைத்து பிடித்து அது சாகும் வரை கடித்த கொன்றிருக்கிறார். இந்த சம்பவம் தெரிந்த உடன் தீபக்கின் உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர். இப்போது அந்த சிறுவன் நலமாக இருப்பதாக கூறப்படுகிறது. என்ன பாவம் அந்த பாம்பு தான் செத்து போச்சு.

ஜாஷ்பூர் பகுதியில் ஏராளமான பாம்புகள் இருப்பதால், உள்ளூர் மக்கள் அப்பகுதியை "நாகலோகம்" என்று அழைப்பார்கள். அதனால் அந்த பகுதியில் பாம்புகள் கடித்து அவ்வப்போது மக்கள் இறப்பது நடப்பதாக கூறப்படுகிறது. மேலும் தங்களை கடித்த பாம்பை திரும்பி கடிக்க வேண்டும் என்ற பழக்கம் அல்லது நம்பிக்கையும் அங்கு வாழும் மக்களிடம் இருப்பதாக கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்