தாய் திட்டியதால் மனம் உடைந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி, தற்கொலை செய்த கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவருடைய மனைவி பானு. கணேஷ் மற்றும் பானுவிற்கு திருமணம் ஆகி சில வருடங்களில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சில நாட்களிலே கணேஷ் உடல்நிலை குறைவால் உயிரிழந்து உள்ளார். இதனை அடுத்து கணேஷின் மனைவி பானு, பெண் குழந்தையை தனியாக வளர்த்து வந்துள்ளார்.
இதனையடுத்து பானு தனது தாய் வீட்டிற்கு குழந்தையுடன் வந்து வசித்துவந்துள்ளார். பானு ஆயக்குளத்தூர் அங்கன்வாடி ஆசிரியர் பணிபுரிந்து வருகிறார். பாக்கியலட்சுமி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் தனது மகள் சரியாக படிக்காமல் எப்போதும் செல்போன் பயன்படுத்தி வந்ததை பார்த்து அதனை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பாக்கியலட்சுமி வீட்டின் கழிவறையில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டுள்ளார். நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த பானு கதவை திறந்தபோது அவரது மகள் தூக்கில் தொங்கியபடி மயக்க நிலையில் இருந்துள்ளார்.
அவரை மீட்ட பானு மருத்துவமனையில் அனுமதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர், பிரேதத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…