Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

140 ரயில்கள் ரத்து..! பயணிகள் கடும் அவதி..!

Muthu Kumar August 02, 2022 & 09:20 [IST]
140 ரயில்கள் ரத்து..! பயணிகள் கடும் அவதி..!Representative Image.

இந்தியா முழுவதும் நேற்று ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களில் ரயில் தண்டவாளங்களில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் நேற்று முதல் தொடங்கப்பட்ட பணியில் ரயில்வே துறை தீவிரமாக இறங்கியுள்ளது. 

இந்நிலையில், இந்தியா முழுவதும்  ரயில் தண்டவாளங்ளில் பராமரிப்பு பணிகள் காரணமாக நேற்று மட்டும் 103 ரயில் சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. அதன்படி, 35 ரயில்கள் பகுதிநேர அளவில் ரத்து செய்யப்பட்டன. மேலும், ராய்ப்பூர் எக்ஸ்பிரஸ், சோலாப்பூர் எக்ஸ்பிரஸ், சூலூர்பேட்டை – சென்னை விரைவு ரயில் உள்ளிட்ட பல சேவைகள் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஐஆர்சிடிசி தளத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் போனதாக பயணிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்