உத்தரபிரதேசத்தில் உள்ள பல்லியாவில், பள்ளங்கள் நிறைந்த பகுதியில், பயணிகள் நிரம்பிய இ-ரிக்ஷா சமீபத்தில் கவிழ்ந்தது. இந்தச் சம்பவம் நாட்டின் இந்தப் பகுதியில் மட்டும் அரிதாக நடப்பது இல்லை என்றாலும், சாலைகளின் மோசமான நிலை காரணமாக குடியிருப்பாளர்கள் படும் அவலத்தை உள்ளூர்வாசி ஒருவர் செய்தியாளரிடம் விவரித்துக் கொண்டிருந்தபோது, அவரின் பின்னே இந்த சம்பவம் நடந்ததால், சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்தது.
தற்போது வைரலாகியுள்ள வீடியோ ஒன்று, சாலைகளின் நிலை எப்படி இருந்து வருகிறது என்று ஒரு நிருபர் ஒருவரிடம் கேட்டதைக் காட்டுகிறது. இதற்கு, நான்கு, ஐந்து ஆண்டுகளாகியும், பழுதடைந்த சாலைகளை எந்த பிரதிநிதியும், அதிகாரியும் கண்டுகொள்ளவில்லை என அப்பகுதியினர் கூறுகின்றனர்.
அந்த நபர் தனது வீடியோவை ஒரு சேறும் சகதியும் நிறைந்த பள்ளமான பகுதிக்கு அருகில் இருந்து எடுத்துள்ளதை பார்க்கலாம். மேலும் அதிகார மட்டத்தில் இருந்து யாரும் இந்த பிரச்சினையில் தங்கள் அக்கறையை காட்டவில்லை என்று விளக்குகிறார்.
மேலும் மின்-ரிக்ஷாக்கள் அந்த பகுதியை கடக்க தொடர்ந்து போராடுகின்றன. பள்ளங்களால் பயணிகள் காயம் அடைவதுடன் கை கால்கள் உடைந்து அவதிப்படுகின்றனர் என்கிறார்.
இது தொடர்பாக எழுத்துப்பூர்வ புகார் அளிக்கப்பட்டுள்ளதா என்று பத்திரிகையாளர் கேட்டபோது, துணைப் பிரிவு மாஜிஸ்திரேட் போன்ற மூத்த அதிகாரிகள் அதே சாலை வழியாகச் செல்கிறார்கள் என்றும், ஆனால் பரிதாபகரமான நிலையை சரி செய்யத்தான் மறுக்கிறார்கள் என்றும் அந்த நபர் கூறுகிறார்.
இந்த நேரத்தில்தான் பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு இ-ரிக்ஷா பெரிய பள்ளம் காரணமாக வீடியோவின் பின்னணியில் கவிழ்ந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, வாகனத்தை பலர் போராடி பள்ளத்திலிருந்து வெளியே எடுத்தனர்.
உத்தரபிரதேசத்தில் உள்ள சாலைகளின் மோசமான நிலையை இது காட்டுவதாக நெட்டிசன்கள் பலரும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…