தென்னாப்பிரிக்காவின் தெற்கு நகரமான கிழக்கு லண்டனில் உள்ள இரவு விடுதியில் 17 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் என்று கூறப்படுகிறது.
நகர மையத்திலிருந்து சுமார் மூன்று கிமீ தொலைவில் உள்ள காட்சி பூங்காவில் நடந்த இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்ததன் மூலம் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.
போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பிரிகேடியர் டெம்பின்கோசி கினானா, அவர்கள் எந்த சூழ்நிலையில் இறந்தார்கள் என்பது விசாரணையில் உள்ளது என்றும் 18-20 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் மரணத்திற்கான காரணத்தை மிக விரைவில் கண்டறிவோம் என்றும் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…