Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கட்டுக்கட்டாக பணம் கண்டெடுப்பு.. இலங்கை அதிபர் மாளிகை பதுங்கு குழியில்!!

Sekar July 10, 2022 & 12:50 [IST]
கட்டுக்கட்டாக பணம் கண்டெடுப்பு.. இலங்கை அதிபர் மாளிகை பதுங்கு குழியில்!! Representative Image.

இலங்கை அதிபர் மாளிகையின் பதுங்கு குழியில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்ட நிலையில் அந்நாட்டு மக்கள் அதிபர் கோத்தபய தலைமையிலான அரசு பதவி விலகக்கோரி மாதக்கணக்கில் போராடி வருகின்றனர். அவர்கள் நேற்று அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு மாளிகைக்குள் நுழைந்தனர்.

இதனால் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே உயிருக்கு அஞ்சி பாதுகாப்புப் படை உதவியுடன் ரகசிய இடத்திற்கு தஞ்சம் புகுந்துவிட்டார்.

இந்நிலையில் இலங்கை அதிபர் மாளிகையில் போராட்டக்காரர்கள் தொடர்ந்து தங்கியுள்ள நிலையில், அங்குள்ள பதுங்கு குழியில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கில் பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை கைப்பற்றி போராட்டக்காரர்கள் அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர். 

இதற்கிடையே இலங்கையில் அமைதியை நிலைநாட்ட போராட்டக்காரர்கள் ஒத்துழைக்க வேண்டும் முப்படை தளபதி ஷவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்