நாமக்கல் ராசிபுரம் அருகே சாலையில் நடந்த விபத்தை ஆய்வு செய்துகொண்டிருந்தபோது சுற்றுலா வேன் மோதியதில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
ராசிபுரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அணைப்பாளையம் பிரிவு சாலையில் கடந்த சில நாட்களாக பாலம் காட்டும் பனி நடைபெற்று வருகிறது. இதனால் வாக்கங்கள் செல்ல மாற்று பாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாலையில் சென்ற கார் ஒன்று தடுப்பில் மோதி விபத்திற்குள்ளானது, அப்போது ஏற்பட்ட போக்குவரத்துக்கு நெரிசலை சீர்செய்ய புதுச்சத்திரம் போலீஸ் நிலைய சிறப்பு-சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், ராசிபுரம் காவலர் தேவராஜன் ஆகிய இருவர் நேற்று இரவு 12 மணியளவில் அங்கு சென்றுள்ளனர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி லாரியில் பின் பக்கத்தில் நின்றுகொண்டு விசாரித்து கொண்டிருந்தனர், அப்போது அவ்வழியாக திருநள்ளாரில் இருந்து சேலம் மாவட்டம் இளம்பிள்ளைக்கு சென்ற சுற்றுலா வேன் வேகமாக வந்து காவலர்கள் மீதும் லாரி மீதும் மோதியது, இதில் தேவராஜன்(வயது 37) உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானர். சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் கவலைக்கிடமான நிலையில் ஆம்புலன்சில் கொண்டு செல்லும்போது உயிரிழந்தார்.
சுற்றுலா வேனில் இருந்த 3 பெரும் மற்றொரு காவலர் மணிகண்டன் என்பவரும் காயமடைந்தனர் அவர்கள் 4 பேரும் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…