Tamilnadu News Live : தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் இன்று 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
அதன்படி, சென்னையில் 3,000 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைறும். இந்நிலையில், தமிழகம் முழுவதும் இதுவரை 28 சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளது. அதில், முதல் தவணை தடுப்பூசி 90 % தமிழக மக்களுக்கு செலுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தமிழகத்தில் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவல் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இதனால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…