Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நூடுல்ஸ் சாப்பிட்ட 2 வயது சிறுவன் உயிரிழப்பு....திருச்சியில் சோகம்..!

madhankumar June 20, 2022 & 11:25 [IST]
நூடுல்ஸ் சாப்பிட்ட 2 வயது சிறுவன் உயிரிழப்பு....திருச்சியில் சோகம்..!Representative Image.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள தாளக்குடி ஊராட்சி மறுத்தகுடி நகரில் வசித்துவரும் சேகர் - மகாலட்சுமி இவர்களுக்கு 2 வயதில் சாய் தருண் என்ற மகன் உள்ளார். 

இந்நிலையில் நேற்று திடீரென சாய் தருண் மயங்கி விழுந்துள்ளார், இதனைக்கண்தடு அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி அவரை மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு மகாலட்சுமி சிறுவனுக்கு நூடுல்ஸ் சமைத்து கொடுத்துள்ளார், பின்னர் அதை பிரிட்ஜில் வைத்துவிட்டு மாரு நாள் காலையில் அதே உணவை கொடுத்துள்ளார். அதனை உண்ட சிறுவன் வேறு எந்த உணவையும் உண்ணாமல் சோர்வாக காணப்பட்டுள்ளார். இதனையடுத்து மாலையில் திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஸ்டெர்லைட் ஆலையை விற்க முடிவு..? வேதாந்த நிறுவனம் அறிவிப்பு..!

ஏற்கனவே அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு பிரிட்ஜில் வைக்கப்பட்ட நூடுல்ஸை கொடுத்ததால் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  தகவல் அறிந்து, உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குழு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்கஅதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு கோரி மனு....!

மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் மருத்துவமனைக்கு சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அது முடிந்த பிறகே சிறுவன் உயிரிழந்ததிற்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்