10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொது தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதனை அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வைத்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். அதன்படி 12 ஆம் வகுப்பில் 93.76 சதவீத மாணவர்களும், 10ம் வகுப்பில் 90.07 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மே மாதத்தில் நடந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டுள்ளார். மேலும் தேர்வில் வெற்றி, தோல்வி போன்ற மனப்பான்மை இருக்க கூடாது, தோல்வியடைந்தவர்களுக்கு ஜூலை ,ஆகஸ்ட்டில் சிறப்பு தேர்வு நடத்தப்படும் என தெரிவித்தார்.
மாணவர்கள் தங்கள் சந்தேகங்களுக்கு 1098,14417 என்கிற எண்ணில் ஆலோசனை பெறலாம் எனவும் குறிப்பிட்டார். இதையடுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. 12ம் வகுப்பில் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.36 சதவீதம் அதிகமாக தேர்ச்சிபெற்றுள்ளனர்.10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வை 1லட்சத்து 7ஆயிரம் பேர் எழுதவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பில் முதல் 3 இடங்கள் பெற்றுள்ள மாவட்டங்களில் விவரம்:
கன்னியாகுமரி, 97.22%
பெரம்பலூர் 97.12%
விருதுநகர் 95.96%
12 ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களை பெட்ரா மாவட்டங்களில் விவரங்கள்:
பெரம்பலூர் 97.95%
விருதுநகர் 97.27%
ராம்நாடு: 97.02%
வரும் ஜூன் 24 ஆம் தேதி மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25ம் தேதி 12ம் வகுப்புக்கான துணைத் தேர்வுகள் தொடங்கவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…