உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு போடப்பட்டது. இந்நிலையில், இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு எதிராக 200 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்புகள் பரவத் தொடங்கியது. இதனால் உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைதொடர்ந்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்தியாவில் உள்ள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு ஜனவரியில் தடுப்பூசி செலுத்துவது தொடங்கப்பட்ட நிலையில் பெரும்பான்மையான மக்கள் முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தியாவில் தற்போது வரை 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி “மீண்டும் வரலாறு படைத்துள்ளது இந்தியா. தற்போதுவரை 200 கோடிக்கும் அதிகமான டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நமது மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் உள்ளிட்டோரை பாராட்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…