இந்தியாவுக்கான அமெரிக்க தூதரான எரிக் கார்செட்டி, சென்னையில் ஆஸ்கார் விருது நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை நேரில் சந்தித்தார்.
இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக எரிக் கார்செட்டி அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் அவர் இந்தியாவிற்கான அதிகாரப்பூர்வ அமெரிக்க தூதராக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ள கார்செட்டி, அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் நெருங்கிய உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய தூதராக அவர் பதவியேற்றது முதல், இந்தியாவின் கலாச்சாரத்தை தெரிந்துகொள்ளவும், அது குறித்து ஆய்வு செய்யும் வகையிலும் நாட்டின் பல மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தொடக்கத்தில் இந்தியாவின் மிக முக்கிய தொழிலதிபர்களான ஆனந்த் மஹிந்திரா, முகேஷ் அம்பானி ஆகியோரைச் சந்தித்த அவர், நடிகர் ஷாருக் கான், இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிராலி ராஜ் உள்ளிட்டோரையும் அவர் சந்தித்துப்பேசினார்.
அதன் தொடர்ச்சியாக, தென் மாநிலங்களில் எரிக் கார்செட்டி சுற்றுப்பயணம் செய்தார். பல இடங்களிலும் பயணத்தைத் தொடர்ந்த அமெரிக்கத்தூதர் எரிக் கார்செட்டி, நேற்று சென்னையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானை சந்தித்தார். அப்போ அவருக்கு நினைவுப்பரிசு ஒன்றையும் எரிக் கார்செட்டி வழங்கி மகிழ்ந்தார்.
இது தொடர்பாக எரிக் கார்செட்டி தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனது தென்னிந்தியப் பயணத்தை எனக்கு பிடித்த விஷயங்களில் ஒன்றான இசையுடன் முடிக்கிறேன். வளர்ந்து வரும் இளம் இசைத் திறமையாளர்களுடன் ஒரு அருமையான சந்திப்பு. ஜெய் ஹோ..!" எனப் பதிவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…