கை குழந்தையாக கடத்தப்பட்ட பெண் 51 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய பெற்றோர்களுடன் ஒன்று சேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
குழந்தை கடத்தப்பட்ட பெற்றோர்களின் மன வேதனை என்ன என்று இயல்பாகவே நமக்குத் தெரிந்தாலும் நிறைய படங்கள் பார்த்திருப்போம். அதில் கடத்தப்பட்ட குழந்தைகள் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்கின்றன என்று காண்பிக்கின்றனர். அதைப் போலவே ஒரு உண்மை சம்பவம் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் போர்ட் வொர்த்தில் வாழும் ஒரு தம்பதியினருக்கு 1971 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. மெலிசா ஹைஸ்மித் என்று பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டினர். அவர்கள் தங்களின் குழந்தையை பார்த்துக் கொள்ள குழந்தை பராமரிப்பாளர் ஒருவரை நியமித்தனர். அவரும் ஆரம்ப காலத்தில் ஒழுங்காக மெலிசாவை கவனித்துக்கொண்டார். மெலிசா 21 மாத குழந்தையாக இருக்கையில், ஒரு நாள் அவரின் தாய் குழந்தை பராமரிப்பாளரிடம் மெலிசாவை ஒப்படைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.
அவர் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்க்கும் போதும் மெலிசாவும் இல்லை, அந்த பராமரிப்பாளரும் இல்லை. பதற்றத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் மெலிசாவின் பெற்றோர். பல வருடங்கள் தேடியும் மெலிசா பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை. இதற்கு இடையில் அவர்களின் அக்கம் பக்கத்தினர் மெலிசாவின் தாய் தான் அந்த குழந்தையை கொன்று விட்டு குழந்தை கடத்தல் நாடகம் ஆடுகிறார் என்ற வதந்தியும் பரவியது.
இப்படியே 51 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த செப்டம்பர் மாதம் மெலிசா போர்ட் வொர்த்தில் இருந்து சுமார் 1100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சார்லஸ்டன் பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்க அடையாளங்கள், டி.என்.ஏ உள்ளிட்ட பரிசோதனை நடத்தினர். விசாரணையின் முடிவில் அந்த பெண் தான் 21 மாத குழந்தையாக தொலைந்து போன மெலிசா என்று அறிவித்தனர். இதனை தொடர்ந்து 51 வருடங்கள் கழித்து மொத்தம் குடும்பமும் ஒன்று சேர்ந்தது. மெலிசா தன்னுடைய தம்பி தங்கை மற்றும் பெற்றோர்களை சந்தித்தார். அவர்கள் ஒன்றாக சேர்ந்து எடுத்த போட்டோவைப் பார்க்கையில் அனைவரும் நெகிழ்ச்சியாகவும், கண்ணீரும் ஏற்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…