தென்னாப்பிரிக்க நெடுஞ்சாலையில் மினி பஸ் மீது லாரி மோதியதில் 19 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தென்னாப்பிரிக்காவின் டர்பனுக்கு வடக்கே சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொங்கோலா பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்த சோகம் நடந்தது.
சம்பத்தன்று மாணவர்கள் பள்ளி முடிந்து மினிபஸ்ஸில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த லாரி ஒன்று, மற்றொரு லாரியை முந்தி ஓவர்டேக் எடுத்தபோது இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் ஐந்து முதல் 12 வயதுக்குட்பட்ட 19 குழந்தைகள் உட்பட 22 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். எனினும், அவர் பின்னர் போலீசில் நேற்று சரணடைந்தார். அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் சாலைகள் ஆப்பிரிக்காவிலேயே மிகவும் மேம்பட்ட ஒன்றாக இருந்தாலும், பெரும்பாலான விபத்துக்கள் பொறுப்பற்ற ஓட்டுதலால் நடப்பதாக குற்றம் சாட்டப்படுவதால் சாலைகளில் பாதுகாப்பு ஒரு பிரச்சினையாகவே உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…