அமெரிக்காவில் உள்ள பெண் ஒருவர் கண்ணிலிருந்து 23 காண்டாக்ட் லென்ஸ்களை அகற்றும் வீடியோ காட்சி இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.
பார்வைக் குறைபாட்டை சரி செய்வதற்காக முகத்தின் கண்ணாடிகள் அணிவது வழக்கம். இதற்கு மாற்று முறையாக தற்போது காண்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது கண்ணாடியைப் போல, கண்களுக்குத் தேவையான பார்வைத் திறனை அளிக்கும். அதே சமயம், இதனை பராமரிப்பதும் முக்கியமான ஒன்று ஆகும். இரவில் தூங்கும் போது லென்ஸ்களை கட்டாயம் அகற்ற வேண்டும். இல்லையெனில், என்ன நடக்கும் என்பதை, அமெரிக்காவில் நடந்த உண்மை நிகழ்வு ஒன்றில் காண்போம்.
அமெரிக்காவில் பெண் ஒருவர், காண்டெக்ட் லென்ஸ் ஒன்றை வைத்த படியே தூங்கியுள்ளார். இவ்வாறு அந்தப் பெண் 23 நாள்கள் தொடர்ந்து இரவில் உறங்கச் செல்வதற்கு முன்பாக லென்ஸை அகற்ற மறந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
மருத்துவரிடம் பரிசோதனைக்குச் சென்ற அந்த பெண், அவரது கண் இமைக்கு அடியில் ஆபத்தான அளவில் காண்டாக்ட் லென்ஸ்கள் இருப்பது தெரிய வந்தது.
காண்டக்ட் லென்ஸ்களை அகற்றும் சமயத்தில் சரியான முறையில் அகற்ற வேண்டும். இதன் மூலம், இது போன்ற காண்டக்ட் லென்ஸ்கள் உபயோகப்படுத்துபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…