கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள அம்பலப்புழாவில் வசித்து வருபவர் பிஜு. இவர் நிறைய கோழிகள் வளர்த்துவருகிறார். அதன்படி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 20க்கும் மேற்பட்ட bv -380 ரக கோழிகளை வாங்கினார். அதில் ஒரு கோழி பிஜுவின் மக்களுக்கு மிகவும் செல்ல கோழியாக வளர்ந்துள்ளது, அதற்கு சின்னு என பெயர் வைத்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவ நாளன்று ஒரு கால் தரையில் ஊன்றமுடியாமல் கோழி நடந்துள்ளது. காலில் ஏதேனும் அடி பட்டிருக்கும் என நினைத்து தைலம் எடுத்து தேய்த்து விட்டுள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் கோழி ஒரு முட்டையிட்டுள்ளது. அடுத்தடுத்து ஒவ்வொரு முட்டையாக இட்டுள்ளது, அப்படி 6 மணி நேரத்தில் 24 நாள் முட்டைகளை இட்டு உரிமையாளர் பிஜுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதனை அக்கம் பக்கத்தினர் அதிசயத்துடன் பார்த்து வருகின்றனர். அதிசய சின்னு கோழியையும் 24 முட்டைகளையும் பார்க்க பிஜுவின் வீட்டில் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். ஆறே மணி நேரத்தில் 24 முட்டைகளை போட்ட சின்னு கோழி அதிசய கோழியாகி விட்டது. இதன் புகைப்படங்கள் 24 முட்டைகள் இட்ட அதிசய சாதனை கோழி என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…