சீனாவின் தென்மேற்கு பகுதியில் இன்று நடந்த ஒரு பேருந்து விபத்தில் 27 பேர் பலியாகியுள்ளனர்.
குய்சோ மாகாணத்தின் ஒரு கிராமப்புறத்தில் உள்ள நெடுஞ்சாலையில், மொத்தம் 47 பேரை ஏற்றிச் சென்ற வாகனம் ஒரு பக்கமாக கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டது.
27 பேர் உயிரிழந்த நிலையில், மீதமுள்ள 20 பேர் மீட்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..
குய்சோவில் கடந்த ஜூன் மாதம், அதிவேக ஒன்று ரயில் தடம் புரண்டதில் ஒரு ஓட்டுநர் கொல்லப்பட்டார்.
முன்னதாக மார்ச் மாதத்தில், ஒரு சீன பயணிகள் ஜெட் விபத்துக்குள்ளானதில் 132 பேர் கொல்லப்பட்டனர். இது பல தசாப்தங்களாக சீனாவில் நடந்த மிக மோசமான விமான விபத்துக்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…