விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் சத்துமாவு கஞ்சி குடித்த 13 குழந்தைகள் உட்பட 29 பேர் மயக்கமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள நெய்குப்பி கிராமத்தில் இருக்கும் அங்கன்வாடி மையத்தில் வளரிளம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சத்துமாவு கஞ்சி காய்ச்சி கொடுத்துள்ளனர். இதனை குடித்த 13 குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி உட்பட 29 பேர் திடீரென்று மயக்கமடைந்தனர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை உடனடியாக வாகனங்கள் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதித்தனர்.
இதனையடுத்து திண்டிவனம் சார் ஆட்சியர் அமீத் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த சத்துமாவு கஞ்சியில் பல்லி விழுந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பல்லி விழுந்த சத்துமாவு கஞ்சியை குடித்து 13 குழந்தைகள் உட்பட 29 பேர் மயக்கமடைந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…