கடனுதவி கொடுக்கப்பட்டும் தடை இல்லா சன்றிதழ் உள்ளிட்டவைகளால் எங்களுக்கு வரவேண்டிய கடனுதவி கிடைக்கவில்லை என நரிகுறவப்பெண் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மகாபலிபுரத்தை சேர்ந்த அஸ்வினி என்ற நரிக்குறவ பெண் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகின் வருகிறது. அதில்,
கடந்த வருடம் தீபாவளி அன்று தமிழக முதலமைச்சர் மகாபலிபுரம் பகுதிக்கு சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது நரிக்குறவ சமூக முன்னேற்றத்திற்காக கடனுதவிகளை முதல்வர் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடனுதவி வழங்கப்பட்ட போதிலும், தடை இல்லை உள்ளிட்ட காரனங்களால் தங்களுக்கு வங்கியில் கடன் தர மறுத்து வருவதாகவும், இது தொடர்பாக பலமுறை ஆட்சியர் மற்றும், அமைச்சர்களை நேரில் சந்தித்த முறையிட்டதாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அந்தப்பெண் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…