சுற்றுலா பேருந்து மற்றும் வேன் ஆகியவை நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து சுற்றுலா வாகனம் வந்துகொண்டிருந்தது, அதே நேரத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து வேன் ஒன்று வந்துகொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக ராமேஸ்வரம் மண்டபம் முகாம் அருகே வேன் மற்றும் சுற்றுலா வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிய இந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் விபத்தில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காயமடைந்தவர்களை மீது சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்த போலீசார் விசாரித்துவருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…