தமிழர்கள் விசேஷமாக கொண்டாடும் விழாக்களுள் முக்கியமான திருவிழா தான் பொங்கல். அதில் முதல் நாள் பண்டிகை போகி. இது ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தின் கடைசி நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் முக்கிய நோக்கமே "பழையன கழிதலும் புதுவென புகுதலும்" தான். அதாவது வீட்டில் இருக்கும் தேவையில்லாத பொருட்களை வீட்டின் வெளியில் தீ வைத்து எரித்து கெட்டதை நம் வாழ்வில் இருந்து அகற்றவதாக கருதப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு நமக்காக கொடுத்த நல்ல விஷயங்களுக்கு நன்றியையும், அடுத்து வரும் ஆண்டு சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் பட்சத்தில் வரவேற்கவும் உகந்த நாள். இதனை "போக்கி" என்று தான் நம் முன்னோர்கள் அழைத்தனர், அது காலப்போக்கில் மருவி "போகி" என்று பெயர் மாறிவிட்டது.
பழையன கழிதலும் புதுவன புகுதலுமே போகி. புதிய நல்ல எண்ணங்களை வரவேற்று போகியை குடும்பத்தோடு கொண்டாடுங்கள்.
இனிய போகி பண்டிகை வாழ்த்துக்கள்...
போகி பண்டிகை உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, வெற்றி, அமைதி மற்றும் செழுமை ஆகியவற்றை கொண்டு வரட்டும்.
அனைவருக்கும் அன்பான போகி திருநாள் வாழ்த்துக்கள்...!
போகியில் மடமையை எரிப்போம்
போகியில் கடமையை மதிப்போம்
சூழல் போற்றி புகை இல்லா
போகியை கொண்டாடுவோம்
அனைவருக்கும் இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்!!!
போகி பண்டிகையின் புனிதமான சந்தர்ப்பத்தில் உங்களுக்கு செழிப்பு, மகிழ்ச்சி, வெற்றி மற்றும் அமைதி கிடைக்க
இனிய போகி வாழ்த்துக்கள்...
பழையதை போக்கி, புதியதை வரவேற்போம்
வீட்டில் இருக்கும் பொருட்களை விட
நம் மனதில் இருக்கும் கோபம் பொறாமை பொய்
போன்ற பல பொருட்களை தூக்கி எரிந்துவிடுவோம்
போகி பண்டிகை வாழ்த்துக்கள்....!
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…